Posts

Showing posts from September 28, 2008

சிரிப்போ சிரிப்பு!!!

வெயில் படும் பொருட்கள் எல்லாம் அழகாக இருப்பதாக கவிஞர் ஷெல்லி சொன்னான்.அதுபோல சிரிக்கும் போது எல்லா மனிதர்களும் அழகாக இருப்பதாக எனக்கு தோன்றும்.நான் தினமும் சந்திக்கின்ற,பழகுகின்ற மனிதர்களிடம் நான் கூர்ந்து கவனிப்பது அவர்களின் சிரிப்புதான்.சிரிப்பில்தான் எத்தனை வகை.நல்ல சிரிப்பு,கள்ள சிரிப்பு,ஆணவ சிரிப்பு,மயக்கும் சிரிப்பு ....இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.என் அலுவலகத்தில் பணியாற்றும் நண்பர்களில் இருவரின் சிரிப்பு ரசிக்கும்படி இருக்கும்.ஒருவன் ஆந்திராக்காரன்(பிரதீப் என்பது அவனது திருநாமம்).அவனுக்கு வாழ்க்கையே ஒரு பெரிய நகைச்சுவை.எதற்கெடுத்தாலும் சிரிப்பான்.அந்த சிரிப்பும் இதயத்தில் இருந்து வரும்.இன்னொருவர் எனது அருமை நண்பர் செந்தில். ஒருவிதமான குறும்புத்தனம் நிறைந்த ஒரு சிரிப்பு சிரிப்பார்.அதுவும் சத்தமாக சிரிப்பார்.பார்க்க மிக அழகாக இருக்கும். அடுத்த நான் ரசித்த சிரிப்பு என் மாப்பிள்ளை சுந்தருடைய சிரிப்பு.பேசும்போது ஒவ்வொரு வாக்கியத்திற்கும் ஒரு சிரிப்பு சிரிப்பான்.கேட்க சந்தோசமாக இருக்கும். என்னுடைய சிரிப்பின் மேல் எனக்கு பெரிய அபிப்பிராயம் கிடையாது.ஏதோ சிரிப்பேன் , அவ்வளவுதான்.ஆனால்