Posts

Showing posts from May 20, 2018

காசி யாத்திரை

 எனது மற்றும் எனது நண்பர்களின் நீண்ட நாள் கனவு சென்ற மார்ச் மாதத்தில் நனவாகியது. அதுதான் காசி பிரயாணம். சில வருடங்களாக நாங்கள் அதைப்பற்றி பேசி வந்தாலும் அதற்கு வேளை வந்தது இப்போதுதான்( விஸ்வநாதர் அருள் வேண்டுமல்லவா அந்த புண்ய மண்ணை மிதிப்பதற்கு?) பிப்ரவரி மாத இறுதியில் எங்கள் காசி பிரயாண வேட்கை தீவிரமாகி விமான பயணத்திற்கு முன்பதிவு செய்ய முயன்றோம். விமான கட்டணம் மட்டுமே ஒரு லக்ஷம் ரூபாய் அருகில் வந்ததால் திட்டத்தை கைவிட்டோம். பிறகு, நான் சென்ற வருடம் ஷீர்டி அழைத்துச்சென்ற டூர் நிறுவனத்திடம் பேசினேன. அவர்கள் சந்தோசமாக ஒப்பு கொண்டார்கள். பயண கட்டணம் ஒருவருக்கு இருபத்தி இரண்டாயிரம் என்று முடிவாகியது.மொத்தம் பனிரெண்டு பேர் திட்டமிட்டபடி மார்ச் 14 கிளம்பி 17 அன்று சென்னை வந்து சேர்ந்தோம். 14 மார்ச்: காலை 9 மணிக்கு கிளம்பி மதியம் 12 மணிக்கு காசி விமான நிலையம் அடைந்தோம். அங்கிருந்து காரில் காசியை அடைய ஒரு மணி நேரம் ஆனது. தங்கும் விடுதியில் சிறிது நேரம் இளைப்பாறி உணவு உண்டு மாலை சாரநாத் சென்று அங்குள்ள புத்த மத அருங்காட்சியகம் கண்டு ரசித்தோம் இரவு, நண்பர்கள் கங்கை ஆரத்தி பார்க்க சென்றுவிட

தானமும் தர்மமும் - கர்ணனின் கதை

 போரில் அர்ஜுனனின் பாணங்களால் வீழ்த்தப்பட்டு கிடக்கிறான் கர்ணன். அவன் செய்த எண்ணிலடங்கா புண்ய செயல்களால் அவன் உயிர் பிரியாமல் இருக்குமாறு தர்ம தேவதை அவனை பாதுகாக்கிறாள். இதை உணர்ந்த கண்ணன் வழக்கம்போல்  தந்திரம் செய்து கர்ணனிடம் அவன் செய்த புண்ய செயல்களின் பலன்களை தனக்கு தானமாக கேட்கிறான். இல்லை என்று சொல்ல மனம் இல்லாத தர்மவான் கர்ணன் அப்படியே செய்கிறான். இந்த விஷயத்தில் அர்ஜுனனுக்கு ஒரு கேள்வி எழுகிறது(அவனுக்கு மட்டும் இல்லை நம்மை போன்ற பலருக்கும் வரும் சந்தேகம் தான்). "கர்ணன் செய்த புண்ணிய செயல்கள் அவன் உயிரை காத்து நின்றன. அப்படி இருக்கையில் அவன் செய்த மொத்த புண்ய செயல்களின் பலனையும் உனக்கு தானமாக கொடுத்தான் என்றால் அந்த தானத்தின் பலன் மிக பெரியது  அப்படி இருக்கையில் அவன் எப்படி இறந்தான்?" என்று கண்ணனிடம் கேட்கிறான். அனைத்தையும் அறிந்த மாயக்கண்ணன் புன்னகையுடன் சொல்கிறான் "கேள் அர்ஜுனா! உலகத்தில் தானம் தர்மம் என்று இரண்டு விஷயங்கள் உள்ளன பிறர் கேட்டு நாம் கொடுப்பது தானம் ஒருவன் கேட்காமலே அவனுக்கு உதவி செய்தல் தர்மம் அதனால் தானத்தை விட தர்மம் உயர்ந்தது , பலன் மிக்கது .நா

சகுனி பற்றி தெரியாத தகவல்கள்

 மஹாபாரதத்தில் கண்ணனுக்கு இணையாக ஒரு கதாபாத்திரமாக நாம் சகுனியை கருதலாம். கௌரவர்களின் பக்கம் நின்று துரியோதனனுக்கு பக்கபலமாக இறுதி போர் வரை இருந்தவன் சகுனி. ஆனால் சகுனி உண்மையில் யார்? கவ்ரவர்களின் வெற்றியை விரும்பியவனா? இல்லை என்கிறது அவன் வரலாறு. காந்தாரியின் உடன் பிறந்த சகோதரர்கள் மொத்தம் நூறு பேர்.சில காரணங்களால் அவர்கள் அனைவரும் கௌவரவர்களால் சிறை பிடிப்பிக்கப்படுகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் சேர்த்து சிறிதளவு உணவே தினமும் வழங்கப்படுகிறது. அவர்கள் அனைவரும் சேர்ந்து அனைவரிலும் இளையவனான சகுனியை காப்பாற்ற  முடிவெடுக்கிறார்கள். அதன்படி அந்த உணவு அவனுக்கு கொடுக்கப்படுகிறது. சகுனியின் தந்தையின் தொடை எலும்பில் இருந்து செய்யப்பட்டது தான் அவன் வைத்திருந்த பகடை. அதனால் அது அவன் என்ன எண்ணை சொல்கிறானோ அதை தான் காட்டும். இதை வைத்து கௌரவர்களை அவன் எப்படி அழித்தான் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆக, ஆகாத கௌரவர்களை உறவாடி கெடுத்தவன் சகுனி.