Posts

Showing posts from April 21, 2013

சிகையலங்கார கடையால் வந்த சிக்கல்!

"வீட்டுக்கு பக்கத்துல ஒரு புது சலூன் வந்தாலும் வந்தது , ஒங்க ஆட்டம் தாங்க முடியல.அத பண்ரேன்,இத பண்ரேன்னு ஒரே காபரா!" இது எனது அருமை தர்மபத்தினியின்(அதென்ன தர்மபத்தினி? புருசன தர்ம அடி அடிக்கறவங்களா?) குமுறல். விசயம் ஒன்றுமில்லை.எனது வீட்டின் அருகே புதிதாக ஒரு Men's Saloon and Spa ஆரம்பித்தார்கள்.சரி , என்னதான் பண்ராங்கனு பாப்பமே என்று ஒருநாள் சென்றேன்.பயபுள்ள கடய பெரிக்கி, தொடச்சு சுத்தமா வைத்திருந்தான்.அதே சமயம் கடையில் ஒருவரும் இல்லை , அந்த கடைக்கார பையனைத் தவிர.வழக்கமாக நான் செல்லும் கடையில் ஒரே கூட்டமாக இருக்கும்.சலூன்காரருக்கு போன் செய்தால் , "அண்ணாச்சி! ஒரு ரெண்டு மணிநேரம் கழிச்சு வாங்க!" என்பார்.அதனால் எனக்கு இன்ப அதிர்ச்சி.பிறகு தான் அதற்கான காரணம் தெரிந்தது.கட்டிங்,சேவிங் எல்லாவற்றுக்கும் இங்கே கட்டணம் அதிகம்.இருந்தாலும் பரவாயில்லை.கடை சுத்தமாக இருக்கிறது, கூட்டமும் இல்லை என்று அங்கேயே கட்டிங்,சேவிங் செய்து கொள்ள ஆரம்பித்துவிட்டேன்.அதோடு நின்றிருந்தால் எனது மனைவியின் கண்டனத்திற்கு ஆளாகியிருக்கமாட்டேன்.பொடுகு நீக்க சிகிச்சை எடுக்கிறேன் பேர்வழி என்று கா

கா.மாவிலிருந்து, செ.மாவிற்கு ஒரு பயணம்!

எனது மச்சினன் வீட்டிற்கு செல்லும்போதெல்லாம் அப்படியே எனது அக்கா வீட்டிற்கும் செல்வது எங்களது வழக்கம்.காரணம் இரண்டு வீடுகளும் ஒரே பகுதியில் உள்ளன.சென்றமுறை அவ்வாறு செல்லும்போது , வழியில் சுவற்றில் தெருவின் பெயர் எழுதி , கீழே செ.மா என்று போட்டிருந்தது,எனது மனைவி அதை பார்த்துவிட்டு "அதென்னங்க! செ.மா?" என்று கேட்டாள். நான் உடனே எனது கிட்னியை கசக்கிபிழிந்து "சென்னை மாவட்டம்" என்றேன்.உடனே அவள் , "அப்படின்னா நாம கா.மாவில் இருக்கிறோமா?" என்றால்."என்னது? கா.மாவா? பேரே செரியில்லயே" என்றேன் நான்.அவள் தெளிவாக, "ஆமா! நம்ம ஏரியா காஞ்சிபுரம் மாவட்டம் தானே?" என்றாள்.இருவரும் சிரித்தோம்.அதன்பிறகு எப்போது எனது அக்கா வீட்டிற்கு சென்றாலும்,"கா.மாவிலிருந்து, செ.மாவிற்கு ஒரு பயணம்" என்று விஜய் டிவியில் வரும் நிகழ்ச்சி அறிவிப்பு போல சொல்ல ஆரம்பித்துவிட்டாள்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த பதிவு!

கடும் பணிச்சுமையின் காரணமாக ஒரு பெரிய இடைவெளி விழுந்துவிட்டது.இன்றாவது நேரம் கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன்.வாழ்க்கை வழக்கம்போல் செல்கிறது.பெரும்பாலான நேரங்களில் என்ன செய்கிறோம்,வாழ்க்கையின் லட்சியம் என்ன என்று நினைப்பேன்.ஏதோ பொழுது விடிகிறது,அலுவலகம் செல்கிறோம்,வீடு திரும்புகிறோம்,உறங்குகிறோம், அடுத்த நாள் இதே கதைதான்.(மறுபடியும் மொதல்ல இருந்தா?) என்னவோ போங்க.வாழ்வின் மீதான தீரா காதல் மனிதர்களை தொடர்ந்து இயங்க வைக்கிறது.இல்லையென்றால் அவனவன் சலித்துபோய் "போங்கடா! இந்த ஆட்டைக்கு நான் வரல!" என்று ஓடி விடுவான்.கும்பமேளாவில் குவியும் சாமியார்களை பார்க்கும் போது எல்லாம் எனக்கு இது தான் தோன்றும்.ஒருமுறையாவது காசி, கங்கை என்று கண்ணால் பார்க்க வேண்டும் என்று ஆசை.எனது நண்பன் ஒருவன் "வைஷ்ணோதேவி போய்வரலாம்" என்று அழைக்கிறான்.அதற்கு இன்னும் வேளை வரவில்லை.