Posts

Showing posts from June 10, 2007

விறகுவெட்டியும்,தேவதையும் - புதுக்கதை

நம் எல்லோருக்கும் விறகுவெட்டி கதை தெரியும்.காட்டுக்கு மரம் வெட்டச் செல்லும் விறகுவெட்டி ஆற்றில் தன் கோடரியை தவறவிட்டுவிடுவான்.பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் அழுவான்.உடனே ஒரு தேவதை தோன்றி "எதற்காக அழுகிறாய்?" என்று கேட்கும்.இவன் நடந்ததை சொல்வான்.அந்த தேவதை முதலில் ஒரு தங்கக் கோடரி தரும்.விறகுவெட்டி அது தனது கோடரி இல்லை என்பான்.பிறகு தேவதை வெள்ளி கோடரி தரும்.இவன் அதுவும் தன்னது இல்லையென்பான்.கடைசியில் இரும்பு கோடரி தரும்.உடனே அதுதான் தன்னுடைய கோடரி என்பான்.அவனுடைய நேர்மையை மெச்சி மூன்று கோடரிகளையும் அவனுக்கு தேவதை தந்துவிடும். புதிய கதை என்ன தெரியுமா? விறகுவெட்டி வழக்கம் போல் காட்டுக்கு சென்றான்.இந்த முறை அவனுடைய மனைவியையும் அழைத்து சென்றான்.அவன் மும்முரமாய் விறகு வெட்டிக் கொண்டு இருந்த போது அவன் மனைவி ஆற்றில் விழுந்துவிட்டாள்.அவன் உடனே ஓவென்று அழ ஆரம்பித்தான்.வழக்கம்போல் தேவதை வந்தது."இந்த தடவ எத தண்ணிக்குள்ள போட்ட, எடுபட்டபயலே?" என்று கேட்டது.விறகுவெட்டி "என் மனைவி ஆற்றில் விழுந்துவிட்டாள்" என்றான்.தேவதை ஆற்றில் இருந்து ரம்பையை வரவழைத்து "இவளா உன்