Posts

Showing posts from March 5, 2006

சாதி ஒழிப்பு வெண்பா

சாதிசாதி என்கிறீர் நாதியற்ற மூடர்காள் சாதியென்ப திரண்டுதான் சத்தியத்தை சொல்கிறேன் ஆதிதொட்டு உள்ளசாதி ஆணும்பெண்ணும் மட்டுமே மீதியெல்லாம் பாதிவந்த குப்பையென்று நீயும்காண் -தமிழ்சித்தன்

நாஸ்ட்ரடாமஸ் -2

ஆச்சரியமான ஒரு விசயம்,ஹிட்லரைப் பற்றி நாஸ்ட்ரடாமஸ் சொல்லியிருப்பதுதான். தனது கணிப்பில் அவர் ஹிஸ்டர் என்று கூறுகிறார்.அந்த ஒரு எழுத்துதன் வித்தியாசம்.ஹிட்லரை சில இடங்களில் குழந்தை என்றும், சில இடங்களில் ஜெர்மனியின் கேப்டன் என்றும் கூறுகிறார்.அவை நெப்போலியனையும், ஹிட்லரையும் கிறிஸ்துவிற்கு எதிரானவர்கள் எனக் குறிப்பிடுகிறார். மூன்றாவதாக ஒருவரைப் பற்றியும் அவர் கூறியிருக்கிறார். அவர் யார் என்பது இதுவரை அறியப்படவில்லை.

நாஸ்ட்ரடாமஸின் கணிப்புகள்

நாஸ்ட்ரடாமஸ் எழுதிய வருங்காலத்தை பற்றிய ஆரூடங்கள் இன்றளவும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. நாஸ்ட்ரடாமஸ் 1503ம் வருடம் பிரான்ஸில் பிறந்தார்.படிப்பில் சிறந்து விளங்கிய அவர் கல்லூரியில் மருத்துவம் பயின்று சிறந்த மருத்துவராக திகழ்ந்தார். பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த அவர், தனது மனைவி மற்றும் பிள்ளைகளை அதே பிளேக் நோயால் இழந்தார்.இதனால் மிகுந்த வருத்தம் அடைந்த அவர் இத்தாலி மற்றும் பிரான்ஸில் சுற்றித் திரிந்தார். இந்த சமயத்தில் தான் அவர் தன்னிடம் இருந்த வருங்காலத்தைப் பற்றி அறியும் திறமையை உணர்ந்தார். நாஸ்ட்ரடாமஸ் இத்தாலியில் இருந்தபோது ஒரு நாள் சாலையில் சில மதகுருமார்கள் அவரைத் தாண்டி சென்றார்கள். அப்போது அவர் திடீரென்று அவர்களில் ஒருவரின் காலில் விழுந்தௌ வணங்கினார். மற்றவர்கள் ஏன் அப்படி செய்தீர்கள் என்று கேட்டதற்கு அவர், "புனிதமான இந்த மனிதரை நான் வணங்குகிறேன்" என்றார். அவரால் வணங்க்கப்பட்ட அந்த மனிதர்தான் பிற்கால்த்தில் போப் ஐந்தாம் சிக்ஸ்டஸ் ஆனார். நாஸ்ட்ரடாமஸ் 1547ம் வருடம் மறுமணம் செய்துகொண்டு சலோன் நகரில் வசிக்கத் தொடங்கினார்.1555ம் வருடம

பழமொழிகளும் அவற்றின் உண்மை அர்த்தங்களும்

பழமொழிகளும் அவற்றின் உண்மை அர்த்தங்களும்------------------------------------------- 1.பந்திக்கு முந்து,படைக்கு பிந்து உண்மை அர்த்தம்: நாம் உண்ணும் போது நமது கையானது உணவை எடுக்க முன்னால் செல்கிறது.(அதாவது பந்திக்கு முந்தும்).போரிடும்போது, எதிரியை வாளால் ஓங்கி வெட்ட முயலும் போது நமது கை பின்னால் செல்கிறது. இது போல் இன்னும் சில பழமொழிகளின் உண்மை அர்த்தத்தை பிறகு எழுதுகிறேன்.