Posts

Showing posts from April 5, 2020

பாண்டிக்குட்டி தொடர்ச்சி

பா.கு மனதில் மின்னல் போல ஒரு எண்ணம் பளிச்சிட்டது."பேசாம வீட்டை விட்டு ஓடி போயிருவோம் " என்று நினைத்தான்.உடனே தனது கால்சட்டை பையில் எவ்வளவு சில்லறை தேறும் என்று பார்த்தான். அலிபாபா குகை போன்ற அவனது பாக்கெட்டில் வறுத்த கடலை, இலந்தை வடை,சோடா மூடி ஆகிய வஸ்துக்களும் அவற்றின் நடுவே சில்லறையாக 20 ரூபாயும் தேறியது.உடனே, பதுங்கி பதுங்கி ஊர் சாவடி வந்தான்.அவன் வரவும் டவுன் பஸ் வரவும் சரியாக இருந்தது.அதில் தொற்றி கொண்டான்.பக்கத்தில் உள்ள பெரிய ஊரான மூக்கறுத்தான்பாளையத்தை அடைவது அய்யாவின் எண்ணம்.               அந்த ஊரை அடைந்ததும் டீ கடையில் அஞ்சு சமோசா, ஒரு டீ அமுக்கினான்(அதற்குமேல் வயிற்றில் இடம் இருந்தது, பைசா தான் இல்லை).பிறகு என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தபோது அந்த அதிசயம் நடந்தது.அவன் அருகில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்த சாமியார் போன்ற ஒரு பெரியவர் மயங்கி விழுந்தார்.பா.கு அவரை முகத்தில் தண்ணீர் அடித்து எழுப்ப, முழித்தவர் "சுகர் சுகர்" என்றார். பா.கு உடனே டீக்கடையில் இருந்த சர்க்கரையை அள்ளி அவர் வாயில் போட்டான்.சிறிது நேரத்தில் அந்த மனிதர் தெளிவாகி எழு

பாண்டிக்குட்டி

        பாண்டிக்குட்டியை உங்களுக்கு தெரியுமா ? தெரியாதா ? பரவாயில்லை, அதற்காக நீங்கள் வருத்தப்படுகின்ற அளவு அவன் ஒன்றும் பெரிய ஆள் இல்லை.எனக்கு அவனை நன்றாக தெரியும்.அவனின் சாகசங்கள் பல உள்ளன.அவற்றில் ஒன்றை தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.        முதலில் பெயர்க்காரணம். அவனது உண்மையான பெயர் பாண்டி.வருடங்கள் ஓடினாலும் அவன் பார்க்க ஆள் சிறியதாக இருந்ததால் அந்த குட்டி அவன் பெயரில் சேர்ந்து கொண்டது . அது மட்டும் இல்லாமல் அவனை அவன் தாய் பாண்டியம்மாள் செல்லமாய் "குட்டி, குட்டி" என்று அழைத்ததும் ஒரு காரணம்.நீங்கள் புத்திசாலியாய் இருந்தால் இந்நேரம் அவன் தந்தை பெயர் பாண்டியப்பன் என்பதை எளிதாக கண்டுபிடித்திருப்பீர்கள்.ஊரில் அவர்கள் குடும்பத்தை பாண்டி அன்ட் கோ என்று தான் அழைப்பார்கள்.           பாண்டிக்குட்டி படிப்பில் படு கெட்டி. எந்த அளவிற்கென்றால் 5 ஆம் வகுப்பை 5 வது தடவையாக படிக்கிறான் . இதோ இன்று அவனுடைய முழு ஆண்டுத்தேர்வின் கடைசி பரீட்சையான சமூக அறிவியல்.அதில் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு ஐயா அளித்த பதில்களும் தஞ்சை பெரியகோவில் கல்வெட்டில் பதிக்கப்பெற வேண்டியவை . உங்கள் பார்

கொரோனாவும் சிராகிகசுவும்!

         அதாகப்பட்டது மஹாஜனங்களே !  இந்த கொரோனா அட்டகாசத்தின் நடுவே நாம் ஒரு அட்டகாசமான(?) கதையை பார்ப்போம்.           நம்ம கதையின் நாயகன் சிவராமக்ரிஷ்ணகணபதிசுப்ரமணியன்.சுருக்கமாக  சிராகிகசு.நண்பர்கள், தெரிந்தவர்களுக்கு சிவா.ஐடி  நிறுவனத்தில் பணி . கொரோனா ஆட்டம் தொடங்கியதும்  அவனது மேலாளர் மன்னார்குடி மாத்ருபூதம் அழைத்தார் .அவர்களுக்கு இடையே நடந்த சம்பாஷணை இதோ. மேலாளர் ம.மா: மிஸ்டர் சிவா! நான் உன்னை  எதற்கு அழைத்தேன் என்றால் ... சிவா : சார் , அந்த பொண்ணு லல்லி சொல்வது எல்லாம் பொய் .நான் அவகிட்ட ப்ரொபோஸ் எல்லாம் செய்யல. வாங்க லல்லி, கேன்டீன்ல காபி குடிக்க போலாம்னு தான் சொன்னேன் மேலாளர் ம.மா: இந்த கருமம் வேறயா? நான் உன்னை அதுக்கு கூப்பிடல. கொரோனா பரவரதால எல்லாரையும்  work from home  செய்ய சொல்றாங்க.நீ நாளைலருந்து ஆபீஸ் வராதே .வீட்ல இருந்து வேல பாரு சிவா: சார் என்னால வீட்ல இருந்து வேல செய்ய முடியாது, ரொம்ப கஷ்டம் மேலாளர் ம.மா: ஆமா, நீ ஆபீஸ் வந்தா மட்டும்  வேல செஞ்சு கிழிச்சிடுவ . சொன்னத செய்.அதுமட்டுமில்ல சிவா, அந்த லல்லி உனக்கு அக்கா மாதிரி, என்னை உன் மாமாவா நெனச்சுக்கோ, புரியுதா