Posts

Showing posts from July 31, 2016

நான் வாக்கிங் போறேன் ! நான் வாக்கிங் போறேன்

" ஆளபாரு! தொந்தியும் தொப்பையுமா!  வயித்து சைஸ குறைங்க!" - இது என் சகதர்மினி அடிக்கடி என்னை பார்த்து உதிர்க்கும் நல்வார்த்தை(?)                      இது போதாதென்று குதிகால் வலி தாங்க முடியவில்லையென்று எலும்புசிகிச்சை நிபுணரை சென்று பார்த்தேன்.அவர் காலை இங்கும் அங்கும் அமுக்கி பார்த்துவிட்டு(எனக்கு மார்க்கெட்டில் தக்காளி வாங்கும் ஞாபகம்  வந்தது), "சார்! இந்த மாத்திரை எல்லாம் சாப்பிடுங்க! நல்லா கேட்கும், ஆனா மாத்திரை சாப்பிடறது நிறுத்தன உடனே வலி வந்திடும்" என்றார்.இது என்ன கொடுமை என்று  நான் கேட்க ,"ஆமா சார் ! நீங்க கொஞ்சம் ஓவர் வெயிட், அத குறைங்க, வலி சுத்தமா நின்னுடும்" என்று திருவாய்மலர்ந்து அருளினார்.                       சரி, இனி கொஞ்சம் உணவு கட்டுப்பாடு அவசியம் என்று வழக்கமாய் மாலைநேரங்களில் அலுவலகத்துக்கு வெளியே கடையில் பஜ்ஜி போண்டா சாப்பிடுவதை நிறுத்திவிட்டு வெறும் இஞ்சி டீ மட்டும் குடிக்க ஆரம்பித்தேன்.சில நேரங்களில் டீயில் இஞ்சி ஜாஸ்தி ஆகி , அதை குடிக்கும் என் முகம் இஞ்சி தின்ற மங்கி போல் ஆகிவிடும்.                        இது ஒருபுறம் இருக்க , என

இமயத்து ஆசான்கள்

Image
         இந்த புத்தகத்தை சென்னையின் பிரபல ஆன்மீக பொருட்கள் விற்பனை நிலையத்தில்  வாங்கி படித்தேன்.சுவாமி ராமா என்பவரின் வாழ்க்கை சரிதம்(சுய சரிதம்).        இமயமலையில் பிறந்து வாழ்ந்த இந்த  ஸ்வாமியின் வரலாறு மிக சுவாரசியமாக இருந்தது.மிக சிறந்த குருநாதர் வாய்க்கப்பெற்ற இவர் உண்மையில் ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட ஆத்மா என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.தனது ஆன்மீக வாழ்க்கையில் தனக்கு உதவிய, வழிகாட்டிய அனைத்து குருமார்களை பற்றியும் நன்றியுடன் நினைவு கூர்ந்து எழுதியுள்ளார்.மனிதர்கள் எளிதில் அடைய முடியாத இமயத்தின் ரகசியமான பல இடங்களில் சுற்றி திரிந்து ஆன்மீக அனுபூதி அடைந்துள்ளார்.        இறை தாகம் கொண்டவர்கள் அவசியம் படித்து பாருங்கள்,பயனடைவீர்கள்.

வெண்பா

       நான் முகநூலில் உறுப்பினர் கிடையாது.அது ஒரு நேரம்கொல்லி என்பது எனது அபிப்ராயம்.எனது தந்தையார் அதன் ஆக்ட்டிவ் உறுப்பினர்.ஏதாவது ஆன்மீக குழுக்கள் அல்லது கவிதை குழுக்களில் சேர்ந்து எதையாவது பதிவிட்டுக்குக் கொண்டிருப்பார்.ஒரு கவிதை குழுவில் அவ்வப்போது ஏதேனும்  தலைப்பு கொடுத்து அதற்கு ஏற்ற கவிதைகளை எழுதி பதிவிட சொல்வார்கள்.இவரும் உடனே எதையாவது யோசித்து எழுதி பதிவிடுவார்.      சமீபத்தில் செருப்பு என்று தொடங்கி விளக்குமாறு என்று முடியும் வெண்பா எழுத சொன்னார்களாம்.இதை கேட்டவுடன் எனது மூளைக்குள் ஒரு நமைச்சல்.நானும் ஒரு காலத்தில் கவிதை எழுதியவன் என்பதால் இயல்பாகவே இதை ஒரு சவாலாக ஏற்று நாம் ஏன் முயற்சி செய்ய கூடாது என்று தோன்றியது. அதன் பக்க விளைவே இந்த வெண்பா.படித்துவிட்டு இது பக்க விளைவா இல்லை பக்கா விளைவா என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். செருப்பு தேய நடந்து தேடி நல்ல பருப்பு வாங்கி வந்தால் - மனைவி இருப்பதில் மட்டம் இதுதான் என்கிறாள் கேட்டேன் அதை விளக்குமாறு.

நாட்டுநடப்பு

                 முன்பெல்லாம் காலம் ரொம்ப கெட்டுபோச்சு என்று யாராவது அங்கலாய்த்தால் எனக்கு எரிச்சல் வரும்.ஆனால் இன்று நானே அதை அடிக்கடி சொல்ல ஆரம்பித்துவிட்டேன்.பத்திரிக்கைகளில் வரும் செய்திகளை படிக்கும் பொது நிறைய நேரங்களில் மனம் கனத்துப்போகிறது.                   பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இன்று மிகவும் மலிந்துவிட்டன.பெண்களை தெய்வமாக கொண்டாடும் ஒரு தேசத்தில் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது ஒரு சோகமான நகைமுரண். டிவி,இணையம் போன்ற ஊடகங்கள் இன்று யாவர்க்கும் எளிதாக கிடைக்கின்றன.பருவ வயதினரை பாதை மாறச்செய்யும் எல்லா விஷயங்களும் இவற்றில் உண்டு.பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளை பார்த்து பார்த்து வளர்க்க வேண்டியிருக்கிறது.                  சமீபத்தில்தான் கம்பர் எழுதிய இந்த செய்யுளை படித்தேன். பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத்து இருந்த பொன்னை ஆகத்தில் ஒருவன் வைத்தான் அந்தணன் நாவில் வைத்தான் இதன் விளக்கமாவது: சிவபெருமான் தனது மனைவி பார்வதியை தனது உடம்பில் ஒரு பாகம் கொடுத்து வைத்தார்.தாமரையில் வசிக்கும் தேவி லட்சுமியை பெருமாள் தனது நெஞ்சிலே வைத்தார்.ப்ரம்மனோ தனது தேவி சரஸ்வதி