Posts

Showing posts from March 9, 2008

அமிர்த வெண்ணெய்

எனது பெரியப்பா வீட்டிற்கு சென்றபோது நிகழ்ந்த ஒரு சம்பவம்.இன்றுவரை எனது பெரியப்பா அதை சொல்லி சிரிப்பார்.ஒருமுறை அவர் வீட்டிற்கு சென்றிருந்தபோது சுச்சா போவதற்காக கழிவறைக்கு சென்றேன். அங்கு சுவர் திட்டில் ஒரு டப்பா இருந்தது.அதில் "அமிர்த வெண்ணெய்" என்று பெயர் வேறு எழுதியிருந்தது.எனக்கு ஒன்றும் புரியவில்லை. வெண்ணெய் தெரியும், இது என்னடா அமிர்த வெண்ணெய் என்று ஒரு குழப்பம்.அடுத்த சந்தேகம் வெண்ணெய்யை எதற்காக கழிவறையில் வைத்திருக்கிறார்கள் என்பது.உடனே அந்த டப்பாவை கையில் எடுத்துக்கொண்டு என் பெரியப்பாவிடம் சென்றேன்."என்ன பெரியப்பா! இதில் அமிர்த வெண்ணெய் என்று எழுதியிருக்கிறது.ஆனால் இதைப் போய் யாரோ கக்கூசில் வைத்திருக்கிறார்கள். நான் கொண்டு போய் சமையலறையில் வைத்துவிடட்டுமா?" என்றேன். அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை.விழுந்து,விழுந்து சிரித்தார்.பிறகு, "அடேய்! இது சாப்பிடும் வெண்ணெய் இல்லை. இது ஆயுர்வேத மருந்து.எனக்கு மூலநோய் இருப்பதால் அதற்கு வெளியே தடவும் மருந்து.நல்லவேளை என்னைக் கேட்டாய்." என்று சொல்லி சிரித்தார்.அதில் இருந்து என்னை பார்க்கும் போதெல்லாம் அதை சொ

பறவைக் காய்ச்சலும், கேக்கும்

பறவைக் காய்ச்சல் மே.வங்கத்தில் வந்து ஒரு கலக்கு கலக்கிய போது இங்கே தமிழ்நாட்டிலும் கோழி விற்பனை சரிந்தது. என் அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர் தொந்தியும், தொப்பையுமாய் இருப்பார். திடீரென்று அவர் தொந்தி குறைந்து காணப்பட்டது. "என்ன ஆயிற்று, உடற்பயிற்சி ஏதாவது செய்கிறீர்களா? " என்று கேட்டேன். அவர் உடனே "அடப் போங்க! பறவை காய்ச்சல் பயத்தால் வீட்டில் சிக்கன் சமைக்க மாட்டேங்கறாங்க. எனக்கும் வெளிய சாப்பிட பயமாயிருக்கு" என்றார்."பரவாயில்லை, இப்படியாவது தொந்தி குறைந்ததே" என்று சொன்னேன். நண்பர் மிகவும் வேடிக்கையான மனிதர். "வாரத்திற்கு ஏழு நாட்கள் மட்டும்தான் அசைவம் சாப்பிடுவேன்.மீதி நாட்கள் சாப்பிட மாட்டேன்" என்பார். அப்படிப்பட்ட மனிதர் அசைவம் சாப்பிடாமல் இருந்தது ஒரு சாதனை தான். மக்கள் முட்டை சாப்பிடுவதை கூட தவிர்த்தனர். நான் ஒரு எஜிடேரியன்(சைவம், ஆனால் முட்டை மட்டும் சாப்பிடுவேன்). நானும் முட்டை சாப்பிடாமல் இருந்தேன். இடையில் ஒருநாள் எனது மச்சான் வீட்டிற்கு சென்றபோது கேக் வாங்கிப் போயிருந்தேன். அன்று எனது அக்காள் மகனும் அங்கு வந்திருந்தான். வாங்கிப் போயிரு