Posts

Showing posts from May 27, 2007

மாணவர் ஜோக்ஸ்

பையன்: அப்பா! ஸ்கூல்ல இந்த குமார் தொல்ல தாங்க முடியலப்பா.எப்ப பாரு என்ன அடிச்சுகிட்டே இருக்கான். அப்பா: நீ இத உங்க வாத்தியார்கிட்ட சொல்ல வேண்டியதுதானடா. பையன்: அட போப்பா! எங்க வாத்தியார் பேரு தான் குமார். ----------------------------------------------------------------------------- ஆசிரியர்: டேய் ராஜா! உலகத்த முதல்ல கப்பல்ல சுத்திவந்தது யாரு சொல்லு. ராஜா: சார்! வெட்டித்தனமா ஊர் சுத்தரவனுங்கள பத்தி நாம ஏன் சார் பேசனும். ----------------------------------------------------------------------------- ஆசிரியர்: மாணவர்களே! மதுரையில் இருந்து திருச்சி நோக்கி ஒரு ரயில் 90கிமீ வேகத்தில் வந்து கொண்டு இருக்கிறது.திருச்சியில் இருந்து மதுரை நோக்கி ஒரு ரயில் 110கிமீ வந்து கொண்டு இருக்கிறது.இரண்டும் ஒன்றை ஒன்று கடக்கும்போது என் வயதென்ன? மாணவன்: சார்! 54 சார். ஆசிரியர்: சபாஷ்! எப்படிடா கரெக்டா சொன்ன? மாணவன்: எங்க மாமா ஒருத்தர் இருக்கார் சார்.அவர் ஒரு அரைலூசு.அவருக்கு வயசு 27.

முதலாளி,தொழிலாளி

ஒரு கம்பெனி முதலாளியும் இரண்டு தொழிலாளிகளும் நடந்து சென்று கொண்டு இருந்தார்கள்.அப்பொழுது ஒரு பூதம் அவர்கள் முன் தோன்றி உங்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டது.தொழிலாளி1 சொன்னான்: " நான் இப்பொழுதே அமெரிக்கா செல்ல வேண்டும்.அங்கே லட்சலட்சமாக சம்பாதிக்க வேண்டும்" .பூதம் "அப்படியே ஆகட்டும்" என்றது.அவன் உடனே மறைந்துவிட்டான்.தொழிலாளி2 சொன்னான்," நான் இப்பொழுதே ஹவாய் தீவு செல்ல வேண்டும்.அங்கே நீச்சல் உடை அழகிகளோடு ஆட வேண்டும்".பூதம் "அப்படியே ஆகட்டும்" என்றது.அவனும் உடனே மறைந்துவிட்டான்.இப்பொழுது முதலாளியின் முறை.பூதம் "உங்களுக்கு என்ன வேண்டும்" என்று கேட்டது.அவர் சொன்னார்."அவர்கள் இருவரும் உடனே இங்கே திரும்பி வர வேண்டும்". நீதி: எப்பொழுதும் முதலாளி தொழிலாளியைவிட புத்திசாலி.