Posts

Showing posts from December 21, 2008

சென்னையில் ஒரு மழைக்காலம்

இந்த வருட மழை சீசன் ரொம்பவே படுத்திவிட்டது. இரண்டு வருடங்களுக்கு மேலாக நான் சென்னை-வேளச்சேரியில் தான் வசித்து வருகிறேன். ஆனால் இந்த வருடம்தான் கன மழை. நிஷா செய்த அட்டகாசம் கொஞ்ச, நஞ்சம் இல்லை. நான் நவம்பர் இருபத்தேழாம் தேதி அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும்போது எங்கள் வீட்டை சுற்றி முழங்கால் அளவு தண்ணீர் இருந்தது. நான் தூங்கி எழுந்து மறுநாள் பார்த்தால் இடுப்பளவு தண்ணீர். பாரதி பாட்டை மாற்றி " எங்கெங்கு காணினும் தண்ணியடா" என்று பாடினேன். பிறகு மீண்டும் தூங்கிவிட்டேன்.திடீரென்று வெளியில் "போட்! போட்!" என்று யாரோ கத்தும் சத்தம் கேட்டது.நான் உடனே, "பாரடா இந்த அநியாயத்தை! இந்த மழையில் எவனோ குழந்தைகள் விளையாட போட் பொம்மை விற்றுக் கொண்டிருக்கிறான்" என்று நினைத்து , யார் அந்த மனிதன் என்று எட்டிப் பார்த்தால் பெரிய கட்டுமரம் ஒன்று எங்கள் வீதியில் மிதந்து செல்கிறது. எங்கள் வீட்டு ஓனரைக் கூப்பிட்டு "இது என்ன சார்?" என்றேன். அவர் ரொம்ப நிதானமாக "நாம இப்ப வெளில போக முடியாது சார். ஏன்னா , இந்த தண்ணியில பா