முதலாளி,தொழிலாளி

ஒரு கம்பெனி முதலாளியும் இரண்டு தொழிலாளிகளும் நடந்து சென்று கொண்டு இருந்தார்கள்.அப்பொழுது ஒரு பூதம் அவர்கள் முன் தோன்றி உங்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டது.தொழிலாளி1 சொன்னான்: " நான் இப்பொழுதே அமெரிக்கா செல்ல வேண்டும்.அங்கே லட்சலட்சமாக சம்பாதிக்க வேண்டும்" .பூதம் "அப்படியே ஆகட்டும்" என்றது.அவன் உடனே மறைந்துவிட்டான்.தொழிலாளி2 சொன்னான்," நான் இப்பொழுதே ஹவாய் தீவு செல்ல வேண்டும்.அங்கே நீச்சல் உடை அழகிகளோடு ஆட வேண்டும்".பூதம் "அப்படியே ஆகட்டும்" என்றது.அவனும் உடனே மறைந்துவிட்டான்.இப்பொழுது முதலாளியின் முறை.பூதம் "உங்களுக்கு என்ன வேண்டும்" என்று கேட்டது.அவர் சொன்னார்."அவர்கள் இருவரும் உடனே இங்கே திரும்பி வர வேண்டும்". நீதி: எப்பொழுதும் முதலாளி தொழிலாளியைவிட புத்திசாலி.

Comments

Popular posts from this blog

அமிர்த வெண்ணெய்

மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!

இமயத்து ஆசான்கள்