வணக்கம் நண்பர்களே , ஜோதிடத்தின் மீதான எனது ஆர்வத்தின் காரணமாக Astro Sid எனும் YouTube சேனல் ஒன்றை தொடங்கி தொடர்ந்து வீடியோக்கள் பதிவிட்டு வருகிறேன்.ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பார்த்து பயனடைய வேண்டுகிறேன்.
எனது பெரியப்பா வீட்டிற்கு சென்றபோது நிகழ்ந்த ஒரு சம்பவம்.இன்றுவரை எனது பெரியப்பா அதை சொல்லி சிரிப்பார்.ஒருமுறை அவர் வீட்டிற்கு சென்றிருந்தபோது சுச்சா போவதற்காக கழிவறைக்கு சென்றேன். அங்கு சுவர் திட்டில் ஒரு டப்பா இருந்தது.அதில் "அமிர்த வெண்ணெய்" என்று பெயர் வேறு எழுதியிருந்தது.எனக்கு ஒன்றும் புரியவில்லை. வெண்ணெய் தெரியும், இது என்னடா அமிர்த வெண்ணெய் என்று ஒரு குழப்பம்.அடுத்த சந்தேகம் வெண்ணெய்யை எதற்காக கழிவறையில் வைத்திருக்கிறார்கள் என்பது.உடனே அந்த டப்பாவை கையில் எடுத்துக்கொண்டு என் பெரியப்பாவிடம் சென்றேன்."என்ன பெரியப்பா! இதில் அமிர்த வெண்ணெய் என்று எழுதியிருக்கிறது.ஆனால் இதைப் போய் யாரோ கக்கூசில் வைத்திருக்கிறார்கள். நான் கொண்டு போய் சமையலறையில் வைத்துவிடட்டுமா?" என்றேன். அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை.விழுந்து,விழுந்து சிரித்தார்.பிறகு, "அடேய்! இது சாப்பிடும் வெண்ணெய் இல்லை. இது ஆயுர்வேத மருந்து.எனக்கு மூலநோய் இருப்பதால் அதற்கு வெளியே தடவும் மருந்து.நல்லவேளை என்னைக் கேட்டாய்." என்று சொல்லி சிரித்தார்.அதில் இருந்து என்னை பார்க்கும் போதெல்லாம் அதை சொ
இந்த புத்தகத்தை சென்னையின் பிரபல ஆன்மீக பொருட்கள் விற்பனை நிலையத்தில் வாங்கி படித்தேன்.சுவாமி ராமா என்பவரின் வாழ்க்கை சரிதம்(சுய சரிதம்). இமயமலையில் பிறந்து வாழ்ந்த இந்த ஸ்வாமியின் வரலாறு மிக சுவாரசியமாக இருந்தது.மிக சிறந்த குருநாதர் வாய்க்கப்பெற்ற இவர் உண்மையில் ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட ஆத்மா என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.தனது ஆன்மீக வாழ்க்கையில் தனக்கு உதவிய, வழிகாட்டிய அனைத்து குருமார்களை பற்றியும் நன்றியுடன் நினைவு கூர்ந்து எழுதியுள்ளார்.மனிதர்கள் எளிதில் அடைய முடியாத இமயத்தின் ரகசியமான பல இடங்களில் சுற்றி திரிந்து ஆன்மீக அனுபூதி அடைந்துள்ளார். இறை தாகம் கொண்டவர்கள் அவசியம் படித்து பாருங்கள்,பயனடைவீர்கள்.
குருசேத்திர யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. பாண்டவர்களும், கவுரவர்களும் தீவிரமாய் போர் செய்து கொண்டிருக்கிறார்கள். கவுரவர் அணியில் இருந்து துரோணர் உக்கரமாய் போர் செய்கிறார். துரோணர் சிறந்த வீரர். அவரை போரிட்டு வெல்ல முடியாது என்பது பகவான் கிருஷ்ணனுக்கு தெரியும்.எனவே துரோணரை தந்திரமாக வீழ்த்த எண்ணுகிறார். துரோணரின் ஒரே பலவீனம் அவரது மகன் அஸ்வத்தாமன் மீது அவருக்குள்ள பாசம்.அவனுக்கு ஏதாவது ஒன்று என்றால் துரோணர் தவித்துப் போய்விடுவார் என்று கணக்கு போடுகிறான் கிருஷ்ணன். உடனே கிருஷ்ணன் தருமரை அழைத்து சொல்கிறான் " தருமா! துரோணரை போரில் வீழ்த்த உங்களால் இயலாது. எனவே நான் ஒரு உபாயம் சொல்கிறேன். அதன்படி செய்" என்கிறான். தருமர் உடனே ,"சொல் கிருஷ்ணா" என்கிறார்.கிருஷ்ணன் சொல்கிறான் " தருமா! துரோணருக்கு தன் மகன் அஸ்வத்தாமன் மீது அளவு கடந்த பாசம்.அவனுக்கு ஏதாவது ஒன்று என்றால் இவர் துடித்துப் போய்விடுவார்.அந்த நேரத்தில் நாம் அவரை வீழ்த்திவிடலாம். அதனால் நீ இப்போது "அஸ்வத்தாமன் இறந்துவிட்டான்" என்று சத்தம் போட்டு சொல்.அதை கேட்டவுடன் அவர் போரை நிறுத்திவிடுவார். பிறகு அ
Comments